×

வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி 20 வயது வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய 50 வயது வக்கிர தந்தை கைது: பலமுறை பலாத்காரம் செய்தது அம்பலம்

டெஹ்லான்: வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி 20 வயது வளர்ப்பு மகளை பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 50 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் டெஹ்லான் அடுத்த முகந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால், அந்தப் பெண் மற்றொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 20 வயதுடைய மகள் உள்ளார். மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20 வயதுடைய பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தனது தாயின் இரண்டாவது கணவரான 50 வயதுடைய அந்த நபர், தனது மகள் முறையான (வளர்ப்ப மகள்) இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இதுபற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். பின்னர், வீட்டில் அந்தப் பெண் தனியாக இருக்கும் போதெல்லாம், பல முறை அந்தப் பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த நபரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முடிவு எடுத்து, புரைன் கிராமத்தில் வசிக்கும் தனது தாய் மாமாவைப் பார்க்க அந்தப் பெண் சென்றார். அவர் விசாரித்த போது, அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிந்தர் கவுர் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஐபிசி 376 சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, அவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்று கூறினார்.

The post வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி 20 வயது வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய 50 வயது வக்கிர தந்தை கைது: பலமுறை பலாத்காரம் செய்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : TEHLAN ,Mukandpur ,Dehlan, Punjab ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே சாக்கோட்டையில்...