×

2 அடி நீளத்தில் காய்த்த பயறு


கருங்கல்: கருங்கல் அருகே கிள்ளியூர் ஏலாவை ஒட்டிய பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(45). இவர் தனது தோட்டத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். வாழைகளுக்கு இடையே ஊடுபயிராக பல்வேறு காய்கறி வகைகளையும் பயிரிட்டு வருகிறார். இவர் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்ட வள்ளி பயறுகள் சுமார் 2 அடி நீளத்தில் காய்த்து குலுங்குகின்றன. வழக்கத்தை விட அதிக நீளமாக காய்த்துள்ள பயறை அப்பகுதியினர் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

The post 2 அடி நீளத்தில் காய்த்த பயறு appeared first on Dinakaran.

Tags : Karungal ,Yesudas ,Killiyur Ela ,
× RELATED 2 அடி நீளத்தில் காய்த்த பயறு