×

அறந்தாங்கி சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

 

அறந்தாங்கி, ஏப் 7:புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது.இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சியில் இருந்து செல்லும் பிரதான சாலையாக உள்ள பட்டுகோட்டை ,புதுக்கோட்டை ,காரைக்குடி, பேராவூரணி, ஆவுடையார்கோவில் ஆகிய சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலைகளில் இரவு நேரத்தில் மாடுகள் தூங்குவதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மாட்டின் மீது மோதி உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மாடுகளை சிறை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது. தற்போது மாடுகள் சாலையில் சுற்றி திரிகிறது. விபத்தும் ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Arantangi road ,Arantangi ,Puthukkottai district ,Pattukottai ,Puthukkottai ,Kharaikudi ,Peravoorani ,Avudayarkovil ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்