×

வாகனம் மோதி எலட்ரீசியன் பலி

தேனி, ஏப்.7: தேனி தேசிய நெஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் எலட்ரீசியன் சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் மோகன்(36). இவர் எலட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் சின்னமனூரில் இருந்து தேனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்தபிறகு, இரவு மோட்டார் சைக்கிளில் சின்னமனூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோகனின் மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி எலட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Tags : Theni National Highway ,Mohan ,Raja Raismill Street, Chinnamanur ,Chinnamanur ,Theni ,
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...