×

முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை

சிவகங்கை, ஏப். 7: மதுரையில் தமிழக முதல்வர் நாளை மறுநாள் (ஏப்.9) பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மதுரையில் நாளை மறுநாள் மதுரை ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Sivagangai ,Madurai ,Tamil Nadu ,DMK District ,Cooperative Affairs Minister ,KR Periyakaruppan ,Sivagangai Lok Sabha ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...