×

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்

நியூயார்க்: அமெரிக்காவில் மற்றொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  2024ம் ஆண்டு தொடங்கியது முதலே அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்களும், அமெரிக்கவாழ் இந்தியர்களும் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் கதையாக நீடிக்கிறது.

அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படுவதை தடுக்க பைடன் நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்திருந்தாலும் தாக்குதல்களும், மர்ம மரணங்களும் நீடிக்கின்றன. அந்த வகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் தங்கி படித்து வந்த உமா சத்ய சாய் கடே என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் “சத்ய சாய் கடே மர்ம மரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள சாய் கடேவின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும்“ என தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 10வது முறையாக நடந்துள்ள இந்திய மாணவரின் மர்ம மரணம் அமெரிக்கா செல்ல விரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

The post அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : US ,New York ,America ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி