×

சரத்பவார் பேரன் மீது தேர்தல் கமிஷனில் ‘பீட்டா’ திடீர் புகார்: நண்டுவை துன்புறுத்திட்டாரு….

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி தலைவர் சரத்பவார் பேரன் ரோஹித் பவார் எம்எல்ஏ என்பவர் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், நண்டுகளின் கால்களை கட்டிப்போட்டு அதனை செய்தியாளர்களின் முன்பு காட்டினார். தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தில் கழுதைகள், காளைகள், யானைகள், மாடுகள் போன்ற விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எம்எல்ஏ ரோஹித் பவாரின் செயல் தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக கூறி, விலங்கு உரிமை அமைப்பான ‘பீட்டா’ சார்பில், தேர்தல் அதிகாரிகளுக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘ தேர்தல் விதிகளை மீறி ரோஹித் பவார் செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சரத்பவார் பேரன் மீது தேர்தல் கமிஷனில் ‘பீட்டா’ திடீர் புகார்: நண்டுவை துன்புறுத்திட்டாரு…. appeared first on Dinakaran.

Tags : BETA ,Election Commission ,Sarathpawar ,Nandu ,MUMBAI ,Nationalist Congress Party ,Sharathpawar ,Rohit Pawar ,MLA ,Maharashtra ,Nandu… ,Dinakaran ,
× RELATED இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே...