×

கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ் படித்த அண்ணாமலை: நடிகர் கருணாஸ் காட்டம்

தென்காசி அருகே இலஞ்சியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட கட்சிகளில் ரவுடிகள் உள்ளனர் என்று அண்ணாமலை கூறுகிறார். ஒரு ரவுடியே இதனை சொல்லக்கூடாது. ஒரு கட்சியில் எந்தெந்த பதவிகளில் ரவுடிகளை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐபிஎஸ் படித்து வந்த ஒருவர் இருப்பார் என்றால் அது அண்ணாமலையாகத்தான் இருக்கும். தற்போது நடைபெறுவது சாதாரண நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. தேசத்தை பாதுகாக்க வேண்டிய இக்கட்டான தேர்தல். நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெள்ளையர்கள் நமது செல்வங்களை சுரண்டி கொண்டு போனார்கள்.

தற்போது மோடி அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளத்தை மொத்தமாக காலி பண்ணி விட்டார்கள். இந்திய மக்களிடம் இருந்தும் பெறப்படும் ஜிஎஸ்டி வரி, வருமான வரி உள்ளிட்ட அனைத்து பணத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து விட்டார். 70 ஆண்டுகளாக மக்களுக்காக உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் மோடி 10 ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார். துறைமுகங்கள் கூட தப்பிக்கவில்லை. பாஜவிற்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் ஒரு இடம் கூட பாஜவால் வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ் படித்த அண்ணாமலை: நடிகர் கருணாஸ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,IPS ,Rowdy ,Karunas Kattam ,Ilanchi ,Tenkasi ,Mukulathor Tiger Force ,Karunas ,
× RELATED அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய...