×

தேர்தல் நேர்மையா நடக்கும் என்பது ‘டவுட்’; மோடி சிறந்த நாடக நடிகர்.! முத்தரசன் ‘கலாய்’

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் துவாக்குடி பஸ் நிலையம் அருகில் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  மோடி சிறந்த நாடக நடிகர். சாமானிய மக்கள் வாங்கும் கடன், விவசாய கடன், கல்விக்கடன் சிறு, குறு தொழில்களுக்கு வாங்கும் கடன் ஆகியவற்றை கட்டாய வசூல் செய்ய தீவிரம் காட்டுகிறார். ஆனால் பல லட்சம் கோடி கடன்களை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லும் தொழிலதிபரிடம் இருந்து கடனை வசூலிக்காமல் தள்ளுபடி செய்கிறார்.

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் அவரது குடும்பம் என்று பீற்றிக்கொள்கிறார். ஆனால் சொந்த மனைவியை காப்பாற்றாத நபர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். இப்போது நடைபெறும் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கட்சியினருக்கு பாரபட்சமாக சின்னங்களை ஒதுக்கினார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. பாஜ கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை உடனே ஒதுக்கி கொடுக்கிறார்கள். அதே வேளையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை. வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஆகவே பாசிச கொள்கை கொண்ட பாஜவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தேர்தல் நேர்மையா நடக்கும் என்பது ‘டவுட்’; மோடி சிறந்த நாடக நடிகர்.! முத்தரசன் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Tags : Modi ,Mutharasan 'Kalai ,Tiruchi Parliamentary Constituency Madhyamik ,Durai Vaiko ,Communist Party of India ,State Secretary ,Mutharasan ,Duvakkudi ,station ,
× RELATED மோடி, அமித்ஷா எத்தனை முறை அலைந்தாலும் ஒரு பயனில்லை: முத்தரசன் கலாய்