×

மக்களின் அன்பால் வெற்றி பெறுவேன் தென்சென்னை பெண்கள் சம்பாதிக்க வழிவகை செய்வேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி

சென்னை: தென் சென்னை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். காலை முதல் வீடு வீடாக சென்று அவர்களின் வீடுகளிலேயே சாப்பிட்டு மக்களோடு மக்களாக களப்பணியில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதாக உறுதி அளித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் அக்கா வந்திருக்கிறேன் என்று கூறி வாக்கு சேகரிப்பது வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் அவருக்கு செல்லும் இடமெல்லாம் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயோத்தியா மண்டபம், ஸ்டேஷன் ரோடு, காசி விஸ்வநாதர் கோயில், லேக் வியூ ரோடு ஜங்ஷன், முத்துரங்கன் சாலை, கெனால் பேங்க் ரோடு, தி.நகர் பஸ் டிப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். நல்லாங்குப்பம் பகுதியில் தமிழிசை வாகனத்தில் வருவதை பார்த்த பெண் ஒருவர் அதிரசத்தை கொடுத்து வரவேற்றார். அதிரசத்தை அளித்த சகோதரியின் அன்பால் அகமகிழ்ந்தேன் என்று உற்சாகமடைந்தார்.

பிரச்சாரத்தின் போது, தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வெற்றி பெற்றால் நாம் எம்.பி., இல்லை. மக்கள் ஒவ்வொரும் எம்.பி.க்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் போட்டியிடுகிறேன். அந்தந்த தெருவில் இருகிற மக்கள், நான் தான் எம்.பி., என்று நினைத்து கொள்ளலாம். அந்தளவிற்கு என்னுடைய பணி, சிறப்பாகவும், தனித்துவமாகவும் இருக்கும். தென்சென்னை தொகுதிக்கு பிரத்யேக தேர்தல் அறிக்கை இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும். மக்கள் ஆதரவு இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறுவேன். மக்களின் அன்பு மழையால் நனைந்து கொண்டிருக்கிறேன். மக்களின் அன்பு தான் எனது பலமாக உள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் இருக்கிறது. பாஜ தொண்டர்கள் இரவு பகல் பாராமல் எனக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களிடம் வீடு வீடாக சென்று கோரிக்கைகளை பெறுகிறேன். வெற்றி பெற்றதும் அதை எல்லாம் நிறைவேற்றி தருவேன். சில பகுதிகளில் மருத்துவமனை கேட்கிறார்கள். நகர்ப்புற ஏழை பெண்களுக்கு சில திட்டங்களை கேட்டுள்ளார்கள். அவர்கள் சொந்தமாக சம்பாதிக்க வழிவகை செய்வேன். இந்த தொகுதியில், ஒவ்வொரு சட்டமன்ற தொதியில் ஒரு நாடாளுமன்ற அலுவலகத்தை திறப்பேன். தென்சென்னை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று காலை தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அவருடன், பாஜ மாவட்ட தலைவர் காளிதாசன் மற்றும் கூட்டணி கட்சியினர்.

The post மக்களின் அன்பால் வெற்றி பெறுவேன் தென்சென்னை பெண்கள் சம்பாதிக்க வழிவகை செய்வேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Bahia ,Tamilyasai Soundararajan ,Chennai ,South Chennai ,Baja ,Tamilyasai Choundararajan ,Tensenna ,Bajaj ,
× RELATED ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம்...