×

தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்ற எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று: ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்ற எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

நேற்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்த நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கடந்த 10 நாட்களாக விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாகச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புகழேந்தி தனது கடைசி மூச்சு வரை களப்பணி ஆற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

அனைத்து சமூக மக்களிடமும் அன்பாகப் பழகியவர் புகழேந்தி. எனக்கு இனிய நண்பராக இருந்தவர். தொகுதி மக்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் நற்பெயர் பெற்றவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்ற எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று: ஜவாஹிருல்லா இரங்கல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Jawahirullah ,Chennai ,People's Party ,President ,Pugazhendi ,Wickrevandi ,DMK ,Villupuram South District ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...