×

குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு ஒன்றுக்குள் நுழையும் காட்சி வெளியீடு.. சிறுத்தை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்புகளில் சிறுத்தை மற்றும் கரடி உலாவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கி விட்டதால் அனைத்து இடங்களிலும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் குடியிருப்பு நோக்கி உலாவருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பகுதியில் குடியிருப்பு அருகே சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் உலா வந்துள்ளது. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடியும் அதே பகுதியில் உலா வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு ஒன்றுக்குள் நுழையும் காட்சி வெளியீடு.. சிறுத்தை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்