×

கே.வி.குப்பம் அருகே வீட்டின் வெளியே நிறுத்திய பைக் திருட்டு

*சிசிடிவி கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள்

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே வீட்டின் வெளியே நிறுத்திய பைக்கை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
கே.வி.குப்பம் அடுத்த ரூசா டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி(37). காட்பாடி தனியார் கல்லூரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு முன்பு தனக்கு சொந்தமான பைக்கை நிறுத்தி தூங்க சென்றார். நேற்று காலை வழக்கம் போல் எழுந்து பார்த்த போது, அவரது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து தயாநிதி கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரே பைக்கில் 3 பேர் நோட்டமிட்டபடி சென்றுள்ளனர். பின்னர், அதில் ஒருவன் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக்கை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அதனடிப்படையில், போலீசார் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

The post கே.வி.குப்பம் அருகே வீட்டின் வெளியே நிறுத்திய பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Dayanidhi ,Roosa township ,KV Kuppam.… ,Dinakaran ,
× RELATED மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே