×

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. மக்களின் மனதில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: செல்வப்பெருந்தகை நம்பிக்கை..!!

விருதுநகர்: இந்திய மக்களின் மனதில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் உள்ளார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் 18வது மக்களவைத் தேர்தல். 17 தேர்தல்களை விட இந்த 18 வது தேர்தல் முக்கியமான தேர்தல். சர்வதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்குமான தேர்தல்; கொடுப்பவருக்கும் எடுப்பவருக்குமான தேர்தல்; இந்த தேர்தல் இந்த மண்ணனை காப்பாற்றப் போகிறது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றப் போகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போகின்ற தேர்தல், பாசிச பாஜக அரசை அகற்றி, நல்லாட்சி மலர்ந்திட இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் கூட்டணி தான் I.N.D.I.A. கூட்டணி. 2004 மற்றும் 2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கூறி தேர்தலில் நிற்கவில்லை. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். அதேபோல் இந்த தேர்தலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதைப்பற்றி எதிர்க்கட்சியினர் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மட்டுமல்ல, இந்தியாவையே மீட்டெடுப்போம்” என்று கூறினார்.

The post மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. மக்களின் மனதில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: செல்வப்பெருந்தகை நம்பிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Virudhunagar ,Selvaperunthakai ,India ,State ,President ,Tamil Nadu Congress Committee ,Manikam Tagore ,Lok Sabha ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...