×

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். ஏடிஎம்-ல் இருந்து சுமார் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குருபரபள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை பணம் எடுக்க வந்த பொதுமக்கள், உள்ளே ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள குருபரபள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை பணம் எடுக்க வந்த பொதுமக்கள், உள்ளே ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து குருபரபள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் வந்த மர்ம நபர்கள் வெல்டிங் கருவி மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துள்ளது தெரிய வந்தது.

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் பணத்தை திருடியவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் வந்து அளிக்கும் தகவல் மூலம் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இரவு பகலாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் கிருஷ்ணகிரி நகரத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

The post கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : SBI Bank ATM ,Guruparapalli ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...