×

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக பாஜ ஆட்சி இருக்கிறது

*முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேச்சு

விகேபுரம் : சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக பாஜ ஆட்சி இருக்கிறது என்று நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை மக்களவைத் தொகுதி, விகேபுரம் அருகே அம்பலவாணபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து திறந்த வேனில் நின்று கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு சேவை செய்தது. மன்மோகன்சிங் ஆட்சியில் தொழில் துறை மற்றும் பொருளாதாரத்தில் நாடு முன்னேறியது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் சூறையாடப்பட்டு மோடி சர்வாதிகாரியாக மாறி நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்கிறார்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக பாஜ ஆட்சி இருக்கிறது. பாஜ ஆட்சியில் விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.160 லட்சம் கோடி கடன் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளனர்’ என்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பேசுகையில், ‘தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்கி வருகிறார். ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுக்கப்படும்’ என்றார்.

அப்போது திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், விகேபுரம் திமுக நகர செயலாளர் கணேசன், நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆலங்குளம் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பாண்டியன், வார்டு செயலாளர் ஷாஜகான், கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் நெடுஞ்செழியன், மதிமுக தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கணேசமூர்த்தி, முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் அபுல்கலாம் ஆசாத், நகர தலைவர் மன்சூர், செயலாளர் ரசூல்முகம்மது, காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை, சிபிஎம் ரவீந்திரன், இசக்கி ராஜன், சிபிஐ கண்ணன், முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக பாஜ ஆட்சி இருக்கிறது appeared first on Dinakaran.

Tags : Nellie ,Congress ,Robert Bruce ,BJP ,Former Union Minister ,Thangabalu ,Vikepuram ,Nellai ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...