×

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது; சீன விவகாரத்தில் பிரதமர் மவுன குரு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்:

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வதந்தி பரப்பி தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற பாஜக முயற்சிக்கிறது. 10 ஆண்டு கால பாஜக அரசின் சாதனையில் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்ல ஒரு செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லை.

பாஜகவில் பிரதமர் முதல் கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பி கதறுகிறார்கள். 2022-ல் பிரதமர் மோடியிடம் கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இம்மியளவில் கூட செயல்படவில்லை என்று முதலமைச்சர் காட்டமான விமர்சனம் செய்தார்.

பேரிடர் காலங்களிலும் ஒன்றிய அரசு பாராமுகம்:

பேரிடர் காலங்களிலும் ஒன்றிய பாஜக அரசு பாராமுகமாக நடந்து கொள்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பாராமுகமாக இருக்கும் ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் திட்டங்களுக்கான நிதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பேரிடர் நேரத்தில் நிதி வழங்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

கூட்டுறவு கூட்டாட்சி, துடிப்பான ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு, அதனை பின்பற்றுவது இல்லை. ஒன்றிய அரசு எங்களை வஞ்சித்து பாரபட்சமாக நடத்தி நீதிமன்றம் செல்ல நிர்பந்திக்கிறது என முதல்வர் சாடினார்.

சீன விவகாரத்தில் பிரதமர் மவுன குரு:

மத உணர்வைக் கிளறிவிட்டு வெறுப்புணர்வை விதைத்து அரசியல் குளிர்காயும் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பாஜக பின்பற்றுகிறது.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலை பரப்புவதற்கு தற்போது மோடியை முன்னிறுத்துகிறார்கள்.

பிரதமர் மோடியை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வகுரு என கட்டமைக்கிறது. மாநில வளர்ச்சி, சீனாவின் அத்துமீறல்களில் பிரதமர் மோடி மவுன குருவாகவே உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பத்திரத்தில் ஒன்றிய அரசு நுணுக்கமாக ஊழல்:

உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பத்திர ஊழல் அம்பலமாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு எந்தளவுக்கு ஊழலை நுணுக்கமாகச் செய்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் பத்திரம் போன்ற மறைமுக நடவடிக்கைகள் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது; சீன விவகாரத்தில் பிரதமர் மவுன குரு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,PM ,Mouna Guru ,China ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,MLA ,Kachativu ,Pawar ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?