×

போளூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் விற்பனை நிலையம் அமைக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்

*எ.வ.வே.கம்பன் வாக்கு சேகரித்து பேச்சு

வந்தவாசி : ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து போளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:தமிழக முதல்வரின் பெண்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு நற்சான்று அளிக்கும் வகையில் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஆரணி மக்களவை தொகுதி முதலிடத்திலும், குறிப்பாக 6 சட்டமன்ற தொகுதிகளில் போளூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகளை உதயசூரியனுக்கு பெற்று தந்த தொகுதியாக இருக்க வாக்களியுங்கள்.

வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை வெற்றி பெற வைத்தால், போளூர் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் இருப்பதாலும், மாநில அளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய விவசாயிகள் வருவதாலும், புதிதாக அமைய உள்ள இந்தியா கூட்டணி ஆட்சியில் மத்திய தொகுப்புடன் கூடி மிகப்பெரிய அளவிலாக விற்பனை கூடம் ஏற்படுத்தப்படும்.

அதேபோல், ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் தேன், தினை உள்ளிட்ட சிறுதானிய உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க சந்தை ஏற்படுத்தப்படும். பிரதமர் மோடி போல் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவேன், ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் எனக்கூறி வாயால் வடை சுடுபவர்கள் நாம் அல்ல. திராவிட மாடல் ஆட்சி நடத்துபவர் நம் முதல்வர்.

அனைவரும் சமத்துவம் அடைய வேண்டி இந்தியா முழுவதும் அனைத்து சமுதாயத்தினரும் நிம்மதியுடன் குடும்பதுடன் வாழ இந்தியா கூட்டணியில் போட்டியிடும் நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.

இதில், முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், மாவட்ட இளைஞர் அணி என்.நரேஷ்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.கே.பாபு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அ.மணிக்கண்டன், ஒன்றிய செயலாளர்கள் அ.எழில்மாறன், பெ.மனோகரன், சேத்துப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜூனன், களம்பூர் நகர செயலாளர் வே.வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் கே.டி.ஆர்.பழனி, காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் வி.பிஅண்ணாமலை, விசிக, கம்யூனிஸ்ட், தமுமுக, முஸ்லிம்லீக் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post போளூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் விற்பனை நிலையம் அமைக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் appeared first on Dinakaran.

Tags : Udayasuriyan ,Polur ,E.V.Ve.Kampan ,DMK ,MS Dharanivendan ,India Alliance ,Arani ,AVV.Kampan ,Bollur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...