×

விழுப்புரம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

*மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இளம்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் அருகே அகரம்சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமார்(35). இவர் 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் கர்ப்பமடைந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதற்கு பாலகுமார் மறுத்துவிட்டு அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பாலகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பாலகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் கூறியிருந்தார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலகுமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post விழுப்புரம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Balakumar ,Agaramchithamur ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...