×

மயிலாடுதுறையில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறை தீவிரம்

மயிலாடுதுறை: சித்தர்காட்டில் மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆட்டின் தலை மற்றும் முன்கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு உள்ளிட்ட இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணித்து வருகின்றனர். 10 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை வைத்து வனத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post மயிலாடுதுறையில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Chittarkot ,Mayiladudura ,Forest Department ,Dinakaran ,
× RELATED போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில்...