×

கிராமம், கிராமமாக சென்று மாதேஸ்வரன் தீவிர பிரசாரம்

 

நாமக்கல், ஏப்.6: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன், எருமப்பட்டி ஒன்றியத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளராக வி.எஸ்.மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக, சட்டமன்ற தொகுதிவாரியாக கிராமம், கிராமாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு குழுக்களாக சென்று, தினமும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அண்ணாநகர், ரெட்டிபட்டி, கூலிப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, பாலப்பட்டி, அலங்காநத்தம், பொன்னேரி, பவித்திரம்புதூர், அம்பாயிபாளையம், முட்டாஞ்செட்டி, செல்லிபாளையம், நவலடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, வேட்பாளர் மாதேஸ்வரன் சென்று மக்களை சந்தித்து உதசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.

வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் வேட்பாளர் மாதேஸ்வரன் சந்தித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் மாதேஸ்வரன், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறினார்.

முதல்வரின் காலை உணவு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிகுழுவினரின் வாழ்க்கை தரம் உயர கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களை கூறி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுகொண்டார். பல இடங்களில் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த பிரசாரத்தின் போது, எருமப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன்சென்றனர்.

The post கிராமம், கிராமமாக சென்று மாதேஸ்வரன் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Matheswaran ,Namakkal ,DMK alliance ,V.S.Matheswaran ,Erumapatti ,Madheswaran ,
× RELATED 78.16 சதவீதம் வாக்குபதிவு