×

பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல்

தேவாரம், ஏப்.6: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்தன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு வாலிபர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தார்.

அலுவலர்கள் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கஞ்சா, போதை பொருட்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்தனர். மேலும்மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் பண்ணைப்புரம் வேலப்பர் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமார்(23) எனவும் தெரியவந்தது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

The post பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Devaram ,Anandan ,Force Officer ,Banpuram Government High School Road ,Uttamapaliam, Theni District ,Dinakaran ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...