×

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவாடானையில் விழிப்புணர்வு பேரணி

திருவாடானை, ஏப். 6: தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இருந்து தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான மாரிச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் , நான்கு ரோடு சந்திப்பு சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக தாலுகா ஆபிஸை வந்தடைந்தது. இதில் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரி
யர்கள் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவாடானையில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness rally ,Thiruvadanai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி