×

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல், ஏப். 6: திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டி சாந்தி நகரை சேர்ந்தவர் ராமர் (39). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விபத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராமர் நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா எஸ்ஐ பிரபாகரன், ஏட்டுக்கள் வேலுமணி, வனராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Jambuliyampatti Shanti Nagar ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...