×

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(56). இவர் சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி காட்டும் ரயில்வே ஊழியராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது தெருவிளக்கு மின் கம்பத்தில் இருந்து அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை பார்த்துள்ளார். ஏதோ கம்பி கீழே விழுந்து கிடப்பதாக நினைத்த அவர் அதனை தூக்கி போடுவதற்காக தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார் உயிரிழந்த ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் கம்பி பழுதாகி சீரமைக்கப்படாததாலும், மின்வாரிய அலட்சியத்தாலும் அறுந்து விழுந்து கிடந்த யின் கம்பியை தொட்டதில் உயரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பல முறை மின்வாரியத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

The post திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vepampam ,Tiruvallur ,Rajeshwari ,Vepampattu Kumaran Nagar ,Thiruvallur ,Chennai Basinbridge Junction ,
× RELATED திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில்...