×

திருப்போரூர் காவல் நிலையத்தில் தென்னை மரத்தில் தீ

 

திருப்போரூர்: திருப்போரூர் காவல் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் தென்னை மரத்தின் ஓலை உரசியதில் தீ பிடித்து எரிந்தது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் காவல் நிலையம் தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. காவல் நிலைய வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் தென்னை ஓலை உரசி நேற்று காலை 6 மணியளவில் தீ பற்றியது. தீ மளமளவென பரவி தென்னை மரத்தின் உச்சியில் எரிய தொடங்கியது.

இதையடுத்து, திருப்போரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து, மின்வாரிய நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர், மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியபடி இருந்த தென்னை ஓலைகள் வெட்டப்பட்டன. பின்னர், மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருப்போரூர் காவல் நிலையத்தில் தென்னை மரத்தில் தீ appeared first on Dinakaran.

Tags : Tiruporur police station ,Tiruporur ,Station ,South Madaveedi ,Tirupporur police station ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து