×

கொள்ளை திட்டம் 5 பேர் கைது

திண்டுக்கல், ஏப். 6: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்ஐ பிரபாகரன் தலைமையிலான போலீசார் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழங்குளத்து கரையில் அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.நகர்அஜித்குமார் (21), முத்தழகுபட்டி குழந்தையேசு (24), கிழக்கு மீனாட்சியநாயக்கன்பட்டி பாண்டிய தினேஷ் (24), பூபதி ராஜா 25, பொன்மாந்துரை ஜான் பிரிட்டோ (49) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பைபாஸில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இரும்பு கம்பி, உருட்டு கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கொள்ளை திட்டம் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Taluk ,Inspector ,Chandramohan ,SI Prabhakaran ,Ponmanthura Pudhupatti ,Alankulam ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது