×

கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இந்த நாடு பட்ட பாடு மக்களுக்கு தெரியும்: சீமான் பேச்சு

சென்னை: வடசென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அமுதினியை ஆதரித்து, கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அரசு பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதேபோல் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நாம் தனியார் பள்ளியையும், தனியார் மருத்துவமனையையும் தான் நாடி செல்கிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும். வடசென்னை பகுதியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டபோது ஓடோடி வந்தோம். அதேபோல் ஆயில் கழிவுகள் கடலில் கலந்த போதும் நாங்கள் களத்தில் வந்தோம்.

இப்படி மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இந்த நாடு பட்ட பாடு மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். இதுவரை பாஜவும் காங்கிரசும் ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளார்கள். காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றே இப்போது பேசுகிறார்கள், இதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பாஜ ரூ.6500 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது என்பதை கூற கூட வங்கியை மிரட்டுகிறார்கள். தற்போது பாஜ நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.இவவாறு அவர் பேசினார்.

The post கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இந்த நாடு பட்ட பாடு மக்களுக்கு தெரியும்: சீமான் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Seeman ,CHENNAI ,North Chennai Naam Tamil Party ,Dr ,Amuthini ,VUC Nagar ,Thandaiyarpet ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...