×

கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தனி அறையில் சீல் வைப்பு

பெரம்பூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தற்போது இரண்டாம் கட்டமாக கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் 35 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதற்காக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணிகள் நேற்று நடந்தது.

அந்த வகையில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து நேற்று காலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் கூடுதலாக 574 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் உள்ள வேலிட் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி, உதவி வருவாய் அலுவலர் லக்ஷ்மண குமார், செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

திமுக சார்பில் கொளத்தூர் பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதேபோன்று, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாகனங்களில் இருந்து இறக்கி தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

இதேபோல், பெரம்பூர் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான 496 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள. ஏற்கனவே முதல் கட்டமாக திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு 248 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஏற்கனவே அவை தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தனி அறையில் சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Tiruvik Nagar ,Perambur ,North Chennai ,Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED எனது வீட்டில்கூட சிசிடிவி...