×

எண்ணூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு மீனவர்களின் பிரச்னைக்கு உறுதுணையாக இருப்பேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ, எண்ணூர் பகுதியில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், கவுன்சிலர் கே.கார்த்திக் ஆகியோருடன் திறந்த ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து எண்ணூர், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம் போன்ற பல்வேறு மீனவ கிராமங்களில் பிரசாரம் செய்த வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவிற்கு திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் எண்ணூர் எஸ்.பி.அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எம்.கே.கண்ணன், கட்சி தொண்டர்கள், மீனவர்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

அப்போது பொதுமக்கள், கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும், சிபிசிஎல் மற்றும் வடசென்னை அனல் நிலையத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், முகத்துவார ஆற்றை தூர்வாரி மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதற்கு ராயபுரம் ஆர்.மனோ, தான் வெற்றி பெற்றவுடன் நடவடிக்கை எடுப்பதாகவும், என்றும் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தார். தொடர்ந்து கத்திவாக்கம் பஜார் தெரு, எர்ணாவூர் போன்ற பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் வேலாயுதம், மணிக்குமார், சரவணன், எம்.டி.சேகர் மற்றும் சாரதி, பார்த்திபன், பி.டி.சி.ராஜேந்திரன், நித்தியா, லைபன், வெங்கடேஷ், சச்சிதானந்தம், ரேணுகா, சுகுமாரன், காஞ்சி சித்திரா, அஞ்சப்பன், கார்கில் நகர் கண்ணன், லெனின், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post எண்ணூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு மீனவர்களின் பிரச்னைக்கு உறுதுணையாக இருப்பேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி appeared first on Dinakaran.

Tags : Ennore ,AIADMK ,Rayapuram Mano ,Chennai ,North Chennai ,Rayapuram R.Mano ,District Secretary ,Madhavaram V. Murthy ,MLA ,K. Kuppan ,East Zone Secretary ,Ajax Paramasivam ,Thiruvottiyur Ajax Bus Station ,Rayapuram Mano Tham ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது