×

வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்

தாம்பரம்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், அரிய வகை மான்கள், புலிகள், குரங்குகள், சிங்கம், கரடி, காட்டெருமை மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் வரும் 9ம் தேதி தேதி (செவ்வாய்க்கிழமை) தெலுங்கு புத்தாண்டு அரசு விடுமுறை என்பதால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும், என்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாக ம் தெரிவித்துள்ளது.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Arijar Anna Zoo ,Vandalur.… ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...