×

பொன்னேரி தொகுதியில் மகளிருக்கு கலைக்கல்லூரி பெற்று தருவேன்: தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வாக்குறுதி

பொன்னேரி: பொன்னேரி தொகுதியில் மகளிர்க்கு கலைக்கல்லூரி பெற்று தருவேன் என தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வாக்குறுதி அளித்து பேசினார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நல்லதம்பி போட்டியிடுகிறார். தொடர்ந்து ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ சிறுனியம் பலராமன் தலைமையில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசூர், தேவம்பட்டு, அண்ணாமலைச் சேரி, கோளூர், மெதூர், திருப்பாலைவனம், காட்டூர், வாயலூர், அரியன்வாயல், மீஞ்சூர் பஜார் வீதி, பட்டமந்திரி, மேலூர், அத்திப்பட்டு, கொண்டக்கரை, நாலூர், மேட்டுப்பாளையம் தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி ஜிப்பில் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி பேசியதாவது: என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் பொன்னேரி தொகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன். பொன்னேரி தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவேன். மகளிர்க்கு கலைக்கல்லூரி பெற்று தருவேன். இந்தப் பகுதியில் சென்ட் பேக்டரி அமைத்து தருவேன். பழவேற்காடு முகத்துவாரத்தை நிரந்தரமாக தூர் வாருவேன். திருவள்ளூர் மக்களின் பிரச்னைகளை தீர நடவடிக்கை எடுக்க போராடுவேன் என வாக்குறுதி அளித்து பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்கள் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பிக்கு ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்எல்ஏ உடன் அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன், தேமுதிக மாவட்ட செயலாளர் டில்லி பாபு, பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், பானு பிரசாத், ஒன்றிய செயலாளர்கள் நாலூர் முத்துக்குமார், பொன்னேரி செல்வகுமார், உபயதுல்லா, சலீம் தமிழரசன், தமிழ்ச்செல்வன், உதயகுமார், அமிர்தலிங்கம், அங்குமுத்து,

வக்கீல் மாரி, தத்தமஞ்சி வெற்றி, மெதூர் திருமலை, வினித், ஆறுமுகம், ராஜாராம், கோதண்டம், ரோஜா ராஜா, ராஜா, துரைராஜ், நாகராஜ், தேமுதிக தனஞ்ஜெழியன், சுமித்ரா குமார், பட்டாபிராமன், கனகவல்லி செல்வழகி, மகாலட்சுமி, காமராஜ், ராமதாஸ், மாரிமுத்து, ரமேஷ், ராஜேந்திரன், ஜெகதீசன், ஜாகிர் உசேன், கணேஷ்குமார், மோகன், திருஞானம் மற்றும் அதிமுக தேமுதிக புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் மாவட்ட ஒன்றிய கிளைகளாக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

The post பொன்னேரி தொகுதியில் மகளிருக்கு கலைக்கல்லூரி பெற்று தருவேன்: தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Ponneri ,DMUD ,Nallathambi ,DMD ,AIADMK ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...