×

மாமல்லபுரத்தில் பூத் சிலிப் விநியோகம்

மாமல்லபுரம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாமல்லபுரத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒர தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மாமல்லபுரத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வீடு வீடாக சென்று வருவாய்த்துறையினர் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வரும் 14ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாமல்லபுரத்தில் பூத் சிலிப் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்