- காங்கிரஸ்
- அசாம்
- முதல் அமைச்சர்
- பிஸ்வா
- குவஹாத்தி
- ஹிமந்த பிஸ்வா சர்மா
- அசாம் காங்கிரஸ்
- பாஜக
- பூபன் குமார் போரா
- ஜனாதிபதி
- தின மலர்
கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரூ.10 கோடிக்கு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. அசாம் காங்கிரஸ் தலைவராக பூபென் குமார் போரா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் “பூபென் குமார் போரா காங்கிரசில் இருந்து விலகி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாஜவில் சேருவார்” என்று ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து சில நாளிதழ்களில் அறிக்கை வௌியிட்டு வருகிறார்.
இதையடுத்து தன் நற்பெயருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சர்மா அறிக்கை வௌியிட்டு வருவதாக பூபென் குமார் போரா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் போரா உள்ளூர் நீதிமன்றத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது ரூ.10 கோடிக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post காங்கிரஸ் தலைவர் பற்றி அவதூறு அறிக்கை; அசாம் முதல்வர் பிஸ்வா மீது ரூ.10 கோடி மானநஷ்ட வழக்கு appeared first on Dinakaran.