×

அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

The post அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...