×

தேர்தல் திருவிழா திருப்பூருக்கு டி-சர்ட் ஆர்டர்களே இல்லை: இந்தியா முழுவதும் ஆர்டர்கள் வராததால் ஏமாற்றம்


திருப்பூர்: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளால் கடந்த காலங்களை போல் இல்லாமல் நடப்பு மக்களவை தேர்தலில் கட்சிகள் சார்பிலான டி-சர்ட் ஆர்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்காக ஏராளமான டி-சர்ட்கள் வாங்கி தருவது வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் அணைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு தேவையான டி-சர்ட்கள் திருப்பூரில் தான் கொள்முதல் செய்யப்படும்.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சியினர் மாநில முழுவதும் பயன்படுத்த தங்களது கட்சியினர் மூலம் திருப்பூரில் ஆர்டர் கொடுத்து தயாரிப்பார்கள். ஆனால் இந்த முறை மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையிலும் கட்சிகளின் சார்பில் டி-சர்ட் ஆர்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி, நூல்விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தள்ளாட்டடத்தில் இருக்கும் திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆர்டர்களும் இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் திருவிழா திருப்பூருக்கு டி-சர்ட் ஆர்டர்களே இல்லை: இந்தியா முழுவதும் ஆர்டர்கள் வராததால் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : election festival ,Tirupur ,India ,Election Commission ,Lok Sabha ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...