×

வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன்…தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர்!!

ஈரோடு : நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில் ரொக்கம் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அமைச்சர்கள், வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபி அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மறுத்துள்ளார்.மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன் என பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் எச்சரிக்கை விடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

The post வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன்…தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Erode ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...