×

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது..!!

கொழும்பு: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 10 கிலோ தங்க கட்டிகளை படகு மூலம் 3 பேர் கடத்தி வருவதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மண்டபம் பகுதியில் சுற்றி திரிந்த 3பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். தங்க கட்டிகளை மணலி தீவில் தூக்கி வீசியதாக கூறியதை அடுத்து கடலுக்குள் தேட ஸ்கூபா வீரர்கள், முத்துக்குளிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

The post இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...