×

திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி

 

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.5: திருக்காட்டுப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக போலீசார் இருப்பதை தெரிவிக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பழமானேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து லைன் கரை, மார்க்கெட் சாலை, கடைவீதி வழியாக பூதலூர் சாலை வரை திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் சி.ஏ.பி.எப் டிஎஸ்பி சுஜித் மித்ரா, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் போலீசார் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

The post திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி appeared first on Dinakaran.

Tags : Police flag parade rally ,Thirukkattupalli ,Thirukkatupally ,Tirukkatupally ,Tamil Nadu ,Tirukkattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு