×

வள்ளியூர் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருட்டு

நெல்லை, ஏப். 5: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இவரது வழக்கம்போல் விஜயநாராயணம் அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு கடந்த 2ம் தேதி சென்று தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற போது அங்குள்ள பம்பு செட்டில் அமைக்கப்பட்டிருந்த ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த விஜயநாராயணம் போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

The post வள்ளியூர் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Nellie ,Thangaraj ,Thalavaipuram ,Nellai district ,Vijayanarayan ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...