×

செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

வில்லிபுத்தூர், ஏப்.5: தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவில்லிபுத்தூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வில்லிபுத்தூரில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வில்லிபுத்தூரில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. தனி தாசில்தார் வானதி தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர்

The post செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Brick Kiln Workers ,VILLIPUTHUR, AP.5 ,THIRUVILLIPUTHUR ,Willibutur ,Dinakaran ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்