×

வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்

வத்திராயிருப்பு, ஏப்.5: வத்திராயிருப்பு அருகே வாகன சோதனையின் போது கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வத்திராயிருப்பு முதல் மகாராஜபுரம் செல்லும் சாலையில் நேற்று மாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தாணிப்பாறை விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வத்திராயிருப்பை சேர்ந்த பொன்ராஜ்(42) என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

The post வாகன சோதனையில் புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Vathirayirupu ,Vathrayiru ,Maharajapuram ,Thanipara Exclusion ,Dinakaran ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு