×

பெண்ணிடம் நகைபறிப்பு

சிங்கம்புணரி, ஏப். 5: கல்லல் பகுதி முனியரசு மனைவி முத்துராதா (35). அவரது மாமியார் வள்ளியம்மை (80). இவர்கள் இருவரும் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் உள்ள விசேஷத்திற்கு டூவீலரில் வந்துள்ளனர். பின்னர் இருவரும் கல்லலுக்கு ெசன்றபோது மு.கோயில்பட்டி அருகே டூவீலரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முத்துராதாவின் 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இதில் இருவரும் டூவீலரில் இருந்து தடுமாறி விழுந்தனர். இதில் வள்ளியம்மைக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் நகைபறிப்பு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Muthuratha ,Muniyarasa ,Kallal ,Valliammai ,Visesha ,Krungakottai ,M. Koilpatti ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...