×

உத்தமர் வேடம் தரிக்கும் மோடி முகத்திரை கிழியும் பாஜ ஆட்சியை விரட்டும் அறிகுறி வடமாநிலங்களில் தென்படுகிறது: செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியில் நடந்த ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். தற்போது ஒன்றிய பாஜ அரசு மக்களின் உயிரோடு விளையாடியிருப்பதற்கான சில அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தரப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெறாத 7 மருந்து கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்துள்ளன.

அரசமைப்புச் சட்டம் 324ன்படி தவறான வழிமுறைகளில் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் வங்கி கணக்கை தேர்தல் ஆணையம் முடக்க வழி இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜ ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நம்பிக்கையோடு தென்படுகின்றன.

மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜவின் ஊழல்களை, உச்ச நீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே இன்றைய தேர்தல் பிரசாரமாக இந்தியா கூட்டணி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை வேண்டுகிறேன்.

The post உத்தமர் வேடம் தரிக்கும் மோடி முகத்திரை கிழியும் பாஜ ஆட்சியை விரட்டும் அறிகுறி வடமாநிலங்களில் தென்படுகிறது: செல்வப்பெருந்தகை உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,states ,Chennai ,Tamil Nadu Congress ,president ,Selvaperunthagai ,Union BJP ,BJP government ,Uttamar ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?