×

பதற்றமான வாக்குச்சாவடியில் சிசிடிவி மூலம் வீடியோ பதிவு : உள்துறை செயலருக்கு கடிதம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்துறை செயலாளர் அமுதாவுக்கு எழுதிய கடிதம்: எந்த பிரச்னைகளும் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி பிரச்னைக்குரிய இடங்களை கண்டறியவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தவும், வாக்காளர்கள் பாதுகாப்பாகவும், தவறாக திசைமாற்றப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகளவில் மத்திய ஆயுதப்படை காவல் படை வீரர்களை களமிறக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுமையாக காட்சிப்பதிவு செய்து, அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடியை சுற்றி நடக்கும் முக்கிய விஷயங்களையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் நுண்பார்வையாளர்களை பணியமர்த்த வேண்டும்.

The post பதற்றமான வாக்குச்சாவடியில் சிசிடிவி மூலம் வீடியோ பதிவு : உள்துறை செயலருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Saku ,Home Secretary ,Amuda ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...