×

நடுக்கடலில் தவித்த மீனவர்கள் 8 பேர் மீட்பு: ஒருவர் பலி

சென்னை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினத்திற்கு கிழக்கே 60 நாட்டிகல் மைல் தொலைவில், சென்னைக்கு 90 நாட்டிகல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் படகு ஒன்று நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு மூழ்கும் நிலைக்கு சென்றது. தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படை அவ்வழியாக சென்ற வணிகக் கப்பலை உதவிக்கு அனுப்பியது.

ஆனால் மீனவர்கள் படகை விட்டு வர மாட்டோம், படகை சரி செய்யும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர். நிலைமை மோசமடைந்ததால் சிங்கப்பூர் பல்கர் வணிக கப்பல் மூலம் 10 மீனவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் மாயமானார். மீட்கப்பட்ட 8 பேரும் கடலோர காவல் படை கப்பல் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

The post நடுக்கடலில் தவித்த மீனவர்கள் 8 பேர் மீட்பு: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Krishnapatnam ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...