×

அமேதி என்னை விரும்பினால்… பிரியங்கா கணவர் பேட்டியால் பரபரப்பு

புதுடெல்லி: அமேதி தொகுதியில் பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா இந்தமுறை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. உபி மாநிலம் அமேதி, ரேபரேலி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மிக்க தொகுதிகள். இங்கு ராகுல், சோனியா போட்டியிட்டு வந்தனர். 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார். ஆனால் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இந்தமுறை வயநாட்டில் மீண்டும் அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டார். ஆனால் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் அமேதி என்னை விரும்பினால் நான் தயார் என்று பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,’ நான் எம்பியாக முடிவு செய்தால் அமேதி மக்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். கடந்த முறை அமேதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் காந்தி குடும்பத்தைத் தாக்குவதில் மட்டுமே அக்கறை கொண்டவர். அப்பகுதியின் வளர்ச்சியை உறுதி செய்வதில்லை. அந்த பகுதி மக்களாக இருப்பது இல்லை. பல வருடங்களாக ரேபரேலி , சுல்தான்பூர், அமேதியில் காந்தி குடும்பம் கடுமையாக உழைத்தது. ஆனால் தற்போது அமேதி மக்கள் தற்போதைய எம்.பி.யால் சிரமப்படுகின்றனர். அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர்கள் தவறு செய்துவிட்டதாக நம்புகிறார்கள்.

அமேதி மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டதாக உணரும் போது, ​​காந்தி குடும்பம் மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கும் போது அல்லது என்னை விரும்பினால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியைத் தருவார்கள்.மக்கள் நான் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், சில மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தால், நான் இந்த நடவடிக்கையை எடுப்பேன்’ என்றார். அமேதியில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும்.

The post அமேதி என்னை விரும்பினால்… பிரியங்கா கணவர் பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Amethi ,Priyanka ,New Delhi ,Robert Vatra ,Congress ,Raebareli ,UP ,Rahul ,Sonia ,
× RELATED நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய...