×

ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு பாஜ வேட்பாளர் ரூபாலாவை நீக்க கோரி போராட்டம்: தீக்குளிப்போம் என எச்சரிக்கை

அகமதாபாத்: ராஜபுத்திரர்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் ரூபாலாவை வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்க வலியுறுத்தி ராஜபுத்திர பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கடந்த புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வெளிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டாாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபுத்திர சமூகத்தினர், வேட்பாளர் ரூபாலாவை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். ராஜபுத்திர சமூக பெண் தலைவர் பத்மினிபா வாலா உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார். இதுகுறித்து பத்மினிபா வாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ரூபாலாவை பாஜ நீக்கும் வரை போராட்டம் தொடரும். பாஜ அவரை நீக்கா விட்டால் பாஜ அலுவலகங்கள் முன் ராஜபுத்திர பெண்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளார்.

The post ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு பாஜ வேட்பாளர் ரூபாலாவை நீக்க கோரி போராட்டம்: தீக்குளிப்போம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Rupala ,Rajputs ,AHMEDABAD ,Rajput ,minister ,Union Minister ,Parshotham Rupala ,Rajkot ,Gujarat ,
× RELATED சத்திரிய சமூக மக்களை அவமதித்து பேசிய...