×

நங்கநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது

அம்பத்தூர்: நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து, பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணிக்கு உதவி கமிஷனர் ராஜலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள அந்த வீட்டை கண்காணித்தனர்.

அப்போது வாலிபர்கள் சிலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, பெண் புரோக்கர் கீதா (40) என்பவர், 17 வயது சிறுமியை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, புரோக்கர் கீதாவை போலீசார் கைது செய்தனர். ேமலும், அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி கீதாவை சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை செங்கல்பட்டில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

The post நங்கநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Nanganallur ,Ampathur ,Assistant Commissioner ,Prostitution Prevention Division ,Rajalakshmi ,Thillai Ganga Nagar ,Vipsara ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...