×

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில், டி.ஆர்.பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், டி.ஆர்.பாலுவை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் வடக்கு மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர், நாவலூர், பிள்ளைபாக்கம், குண்டுபெரும்பேடு, எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமையிலும், தேர்தல் பொருப்பாளர் உமாகாந்த் முன்னிலையிலும் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் நேற்று வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட கவுன்சிலர் குன்னம் ராமமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன், கொளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் (பொறுப்பு) வெள்ளாரை அரிகிருஷ்ணன், எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிரேகா சரவணன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ஜான்போஸ்கோ, கிளை செயலாளர்கள் கொளத்தூர் சங்கர், சௌந்திரராஜன், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Sriperumbudur ,Perumbudur ,DR Balu ,Balu ,Kanchipuram district ,Sriperumbudur union ,
× RELATED மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும்...